Sunday, November 14, 2010

பகுதி 12. வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை

வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்..
முந்தைய பதிவுகளைப் படிக்க கீழ கிளிக் செய்யுங்கள்.


திருச்சிற்றம்பலம். 

சிவனருள் பொலிக....

இறையடியார்களை வணங்கி வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை பற்றிய எனது அனுபவப் பகிர்வுகளின் இடுகையை புகைப்படத் தொகுப்பாக வெளியிட்டு வைஷ்ணோதேவி புனித யாத்திரையை இந்த இடுகையில் நிறைவு செய்கிறேன். அடுத்த பதிவில் இருந்து அமர்நாத் பனிக் குகை பயண அனுபவங்களை துவங்குவோம்.
 

பகுதி:12  வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்.
 
வைஷ்ணோதேவி யாத்திரை புகைப்படத் தொகுப்பு.

 மேலே: காத்ராவின் பின்னணியில் திரிகூட மலைப் பகுதி.
மேலே: காத்ராவில் உள்ள பதிவு அலுவலகம்
மேலே: அடிவாரத்தில் உள்ள நுழைவு வாயில்.
மேலே: நுழைவு வாயிலில் இருந்து மேலே நோக்கி..

 மேலே: குதிரையில் பயணிக்கும் யாத்திரிகள்
 மேலே: காலைக் கதிரவனின் பொற்கிரணங்கள்.
 
 மேலே: பாதுகாப்பான படிக்கட்டுகள்.
மேலே:  ஏறி இறங்குவதற்கு வசதியான படிகள்.
 மேலே: Avalanche Zone. கற்கள் சரியும் ஆபத்தான இடம்.
 மேலே: ஆபத்தான பகுதிகளில் கற்கள் யாத்திரிகளை தாக்கா வண்ணம் அமைத்த கூரைகள்.
 மேலே: அதிக்வாரி தல புராணம்.

 மேலே: அதிக்வாரியில் தேவஸ்தான நிர்வாகத்தின் மூலம் யாத்திரிகளுக்கு 
கிடைக்கும் வசதிகள் பற்றிய அறிவிப்பு பலகை. 
 மேலே: வழியில் பயணிகள் இளைப்பாற வசதியாக கழிவறைகள், 
உணவகங்கள், நொறுக்ககங்கள் மற்று ஓய்வு நிலையங்கள் உள்ளன.
 மேலே:  இரண்டாகப் பிரியும் பாதைகளை காட்டும் அறிவிப்புப் பலகை.
 மேலே: வைஷ்ணோதேவி மலையில் இருந்து காத்ரா நகரக் காட்சி.
மேலே: லங்கூர் குரங்கு கூரை மேல் அமர்ந்து கொண்டு யாத்திரிகளை வேடிக்கை பார்க்கிறது.
மேலே: லங்கூர் வகைக் குரங்குகள் முன்னிலையில் 
மற்ற குரங்குகள் யாத்திரிகளைத் தொந்தரவு செய்யாதாம்.

மேலே: சாதாரணமான குரங்குகள்.  இவை யாத்திரிகளுக்கு தொந்தரவு தராமல் 
அடங்கி இருப்பதே லங்கூர் குரங்குகள் இருப்பதால்தானாம். 
அதற்குத் தான் லங்கூர் குரங்குகளை நிர்வாகம் பாதுகாத்து வளர்த்து வருகிறது.

மேலே: ஹிமகொடி வழியாக பவனம் (தேவி அருள்பாலிக்கும் குகை) 
செல்லும் வழி. மலையை குடைந்து இந்த பாதையை புதிதாக அமைத்திருக்கிறார்கள்.

மேலே: தாயும் சேயும்.

மேலே: மிக அழகான பாதை. தேவி த்வார் என்று இந்த நுழைவாயிலை அழைக்கிறார்கள். 
இங்கிருந்து பவனம் வெகு அருகாமையில் உள்ளது.

மேலே: குடை போல கவிழ்ந்து இருக்கும் ஒரு பாறை. 
செல்லும் பாதையில் பல இடங்கள் பார்க்க ரம்மியமாய் இருக்கும். 

மேலே: இதோ பவனத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்.

மேலே: குறிப்பிட்ட இடத்துக்கு மேல் குதிரைகள், பல்லக்குகள் 
செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது என்னும் அறிவிப்புப் பலகை.

மேலே: இந்த இடத்தில் கிளோக் ரூம் வசதி உள்ளது. 
யாத்திரிகள் மேலும் ஒரு பாதுகாப்பு பரிசோதனை மேற்கொண்ட பின்னரே 
தேவி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

மேலே: தேவியைக் காண முன்பெல்லாம் இந்த சிறு குகை வழியாக அனுமதித்தார்கள். 
நாங்கள் சென்ற சமயம் இந்த வழியில் தரிசனம் செய்ய அனுமதி கிடைக்கவில்லை.

மேலே: ஸிம்ஹ வாகினி. திரி சூலி.

மேலே: கருவறையில் பிண்டி வடிவில் அருள்பாலிக்கும் முப்பெரும் தேவியர்.

மேலே: பைரோன் நாத் சிகரத்தின் தல வரலாறு மற்றும் மலைக் குன்றின் வியூ பாய்ன்ட்

மேலே: நிர்வாகத்தின் உணவகம்.

மேலே: இரவில் ஒளிரும் பவனம்.

மேலே: இரவில் ஒளிரும் திரிகூட மலை. 
(யாத்திரிகள் வசதிக்காக பாதை முழுவதும் ஒளியூட்டப்பட்டுள்ளது)

மேலே: தூரத்தில் இருந்து இரவில் ஒளிரும் திரிகூட மலையின் காட்சி.

மேலே: பனிக்காலத்தில் மலைப்பாதை. 
(ஒரு முறை பனிக்காலத்தில் சென்றால் இந்த அழகை அனுபவிக்கலாம்)

இந்தப் பதிவுடன் வைஷ்ணோதேவி யாத்திரையை நிறைவுறுகிறது. அடுத்த பதிவில் இருந்து அமர்நாத் புனித குகைக்கு பயணம் செய்த அனுபவங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.

ஜெய் மாதா தி

(தொடரும்)

 
புகைப் படங்கள் தந்து உதவிய சஹ யாத்திரிகள் கோவிந்த் மனோஹர், ஜி.கே.ஸ்வாமி, உஷாஜி, கண்ணன், மகேஷ் கொண்டல், உஷாஜி, ரமேஷ்குமார் மற்றும் கூகிள் இணைய தளம் அனைவருக்கும் என் இதய நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.

 
ஓம் நமசிவாய.

No comments: