Monday, September 21, 2009

கபீர் தாசரின் ஆன்மீகக் கவிதை


'தண்ணீரில் வாழும் மீனுக்குத் 
தாகம் என்றால் எனக்குச் 
சிரிப்புதான் வருகிறது.
உன் வசிப்பிடத்திலேயே
மெய்ப்பொருளிருக்க நீயேன்
வனங்கள் தோறும் தேடிச் செல்கிறாய்?
மெய்ம்மை இங்கே இருக்கிறது.
காசியோ மதுராபுரியோ
நீ எங்கு வேண்டுமானாலும் செல்.
உன்னுள் இறைவனைக் 
காணும் வரை - இந்த 
ஒட்டு மொத்த உலகம் 
அர்த்தமற்றது தான் உனக்கு'.

No comments: