Monday, December 6, 2010

தாய்லாந்தில் தொடரும் இந்திய பாரம்பரியம்

83-வது பிறந்தநாள் ‌கொண்டாடினார் உலகின் நீண்ட கால மன்னர் .

தாய்லாந்து அரசர் பூமிபால் அதுல்யதேஜ்  தனது 83-வது பிறந்த நாளை மருத்துவமனையில் இருந்தபடியே எளிமையாகக் கொண்டாடினார்.  பூமிபால் தற்போது நுரையீரல் நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   60 ஆண்டுக்கு மேலாக அரச பதவியில் இருந்து வரும் பூமிபால், உலகில் மிக நீண்ட காலம் அரச பதவியில் இருக்கும் பெருமையைப் பெற்றவராவார். இந்நிலையில் அவரது 83-வது பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.  இதையொட்டி தனது பிறந்த நாளை அங்கிருந்தபடியே எளிமையாகக் கொண்டாடினார். அவர் விடுத்த பிறந்த நாள் செய்தியில், "கடந்த சில ஆண்டுகளாக நாட்டில் அவ்வப்போது வன்முறையும், அமைதியற்ற சூழலும் ஏற்படுகிறது. மக்கள் ஒற்றுமையுடன் இருந்து  நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். நாட்டில் மகிழ்ச்சி நிலவ வேண்டும்' என்று கூறியுள்ளார். மருத்துவமனை முன் கூடிய பொதுமக்கள் பலர் பூமிபாலுக்கு வாழ்த்து தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

தாய்லாந்தின் இந்திய பாரம்பரியம்.
தாய்லாந்தின் அரசர்கள் ராமா என்று அழைக்கப் படுகிறார்கள். தற்போதைய அரசரின் பெயர் பூமிபால் அதுல்ய தேஜ் ராமா IX. இவரும், இளவரசர் மகாசக்ரியும் சமஸ்கிருதத்தில் கவிதை புனையும் திறமை கைவரப் பெற்றவர்கள்.

ராமகீர்த்தி, தாய்லாந்தின் ராமாயணம் பதினேழாம் நூற்றாண்டில் உருவானது. இது எல்லாப் பள்ளிகளிலும் கற்பிக்கப் படுகிறது. உலகின் மிகப் பெரிய இராமாயண சுவற்றோவியங்களை பாங்காக்கில் உள்ள அரண்மனையில் உள்ள எமெரால்ட் புத்தர் கோவிலில் காணலாம்.

சமீபகாலமாக ஒலிம்பிக்ஸில் அறிமுகமாகியுள்ள தாய் பாக்சிங் (Thai Boxing)என்று அழைக்கப் படும் மல்யுத்தம் ஹனுமான்,  அங்கதன், வாலி, சுக்ரீவன் ஆகியோரின் மல்யுத்தத் திறமைகளின் அடிப்படியில் அமைந்தது என்று இப்போதும் தாய்லாந்து மக்கள் பெருமையுடன் சொல்லிக் கொள்ளுகிறார்கள்.

தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேசிய, மலேஷியா போன்ற நாடுகளின் தெருக்களின் பெயர்கள் சமஸ்க்ரிதத்தினால் ஆனவை. எல்லா ஆறுகளும் Mae என்று பெயர்த் துவக்கத்தில் கொண்டுள்ளன. மே என்பது மா (அன்னை) என்று பொருள்படும். தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் ஓடும் நதி மே சாவ்ப்றாயா என்று அழைக்கப்படுகிறது. இமாலயமலையில் உற்பத்தி ஆகி பர்மா, சீனா, லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா நாடுகளில் பாயும் நதியின் பெயர் மா கங்கா ஆகும். இந்த பகுதிகளை ஆண்ட பிரஞ்சுகாரர்கள் இதன் பெயரை மே காங் என்று உச்சரித்து இப்போது மே காங் என்று அழைக்கப்படுகிறது.

கடந்த எழுபது ஆண்டுகளில் தாய்லாந்து இருபது ராணுவப் புரட்சிகள், இருபது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுகளைக் கண்டிருக்கிறது. இந்த நாட்டில் மரண தண்டனை இல்லை. ரத்தக் களரிகளோ, பழி வாங்கும் போக்கோ இல்லை.

இந்த நல்ல பண்பாடுகள் அன்னை இந்தியாவின் கொடை என்கிறார்கள் தாய் மக்கள் நன்றிப் பெருக்குடன். அவர்கள் தாய்மொழியில் தாய்லாந்தை சயாம் தேஷ் என்கிறார்கள். இதற்கு ஸ்ரீ விஷ்ணுவின் (ஷ்யாமா) பூமி என்று பொருளாம்.

இதற்காகவே நாம் பாரதத்தில்  பிறந்திருப்பதற்காக  பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

No comments: