Wednesday, December 22, 2010

சிவாயநம

சிவாயநம

இஃது ஆன்மாக்கள் உய்வதற்கான ஐந்தெழுத்து மந்திரம்.

இம்மந்திரம்-
  - இம்மைக்கும் மறுமைக்கும் இன்துணையாய் அமைவது.
  - நாவினுக்கு அருங்கலம் ஆவது.
  - செவிகளுக்குத் தேனாவது.
  - மெய்யின் பால் பணிய வேண்டுவது.
  - சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லது.
  - ஈர்த்து நம்மை ஆட்கொள்வது.
  - நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடுப்பது.
  - 'அவன்' அருளைக் கூட்டுவிப்பது.
  - மெய்ஞ்ஞானம் ஊட்டுவிப்பது.
  - வினைப் பிறவி வாராமல் விளங்க வைப்பது.
  - நள்ளிருளில் நட்டம் பயிலும் நாதனை காணச் செய்வது.
  - நன்னெறியும், நல்கை விளக்கும் ஆவது.
  - நெஞ்கம் நைந்து நினைய வேண்டுவது.
  - முந்தை வினை முழுவதும் ஓய வைப்பது.
  - கலந்த அன்பாகிக் கசிந்து உள்ளுருக்குவது .
  - இடர் களைந்து இன்பூட்டுவது.
  - 'அவன்' தாளை 'அவனருளாலே' வணங்கவைப்பது.
  - மண்ணில் நல்ல வண்ணம் வாழவைப்பது.
  - அல்லல் பிறவி அறுக்க வல்லது.
  - திகட்டாத பேரின்பத் திருவடிப் பேற்றுக்கு ஆளாக்குவது.

ஓம் நமசிவாய

சிவாயநம ஓம். 

No comments: