Saturday, December 24, 2011

திருக்கோவில் உழவாரப் பணி மன்றத்தின் அழைப்பிதழ்.

திருச்சிற்றம்பலம் 

சைவா போற்றி.
தலைவா போற்றி.

இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

நமது திருக்கோவில் உழவாரப் பணி மன்றத்தின் ஜனவரி மாத திருக்கோவில் உழவாரப் பணி 01.01.2012 ஞாயிறு காலை திருவாலங்காடு அருள்மிகு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் நிகழ திருவருள் கூட்டியுள்ளது.
இதனைக் கண்ணுறும் அன்பர்கள் சுற்றத்துடனும், நண்பர்களுடன் 31.12.2011 (சனிக்கிழமை) காலை எட்டு மணிக்கே வந்திருந்து உழவாரப் பணியினை சிறப்பாக நடத்தி தருமாறு வேண்டுகிறோம். 

சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் உழவாரப்பணி நடைபெற உள்ளது. திருவாலங்காடு திருமுறைப் பாடல் பெற்ற தலம். காரைக்கால் அம்மையார் பாடிய தலம். ஐந்து சபைகளில் ஒன்றான இரத்தின சபை தலம்.

இரண்டு நாட்களும் தங்கும் வசதியும், உணவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருக்கோவிலின் தீப எண்ணெய்க்கு பெருமளவில் அடியார்களின் உதவி தேவைப்படுகிறது.

மதிய நேரத்தில் தொண்டர்களுக்கு அமுது செய்விக்கப்படும்.

திருவாலங்காடு திருக்கோவிலுக்கு செல்லும் வழி:
திருவள்ளூருக்கும், அரக்கோணத்துக்கும் இடையில் திருவாலங்காடு இரயில நிலையம் உள்ளது. அரசு பேருந்து வசதி திருவள்ளூரில் இருந்து உள்ளது. சென்னை சென்டிரலில் இருந்து அரக்கோணம், திருத்தணி செல்லும் மின்தொடர் வண்டிகள் அனைத்தும் திருவாலங்காடு இரயில நிலையத்தில் நிற்கும். இரயில நிலையத்தில் இருந்து திருக்கோயிலுக்கு செல்ல ஷேர் ஆட்டோ வசதி உள்ளது. திருவள்ளூர் பஸ் நிலைய எதிரில் உள்ள நீதிமன்ற வாசலில் இருந்து சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை இரண்டு நாட்களிலும் காலை ஏழு மணிக்கு மன்றத்தின் மூலம் இலவசமாக திருவாலங்காடு வரை திருமுருகன் கல்லூரி பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அமைப்பாளர் சிவ. நா. ஆடலரசன் அவர்களை Cell No.9445121080 இல் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைப் பெறலாம்.
சிவத் தொண்டாற்றி சிவனருள் பெறுக.
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.

No comments: