Friday, February 3, 2012

திருக்கோவில் உழவாரப் பணி மன்றத்தின் அழைப்பிதழ்.


திருச்சிற்றம்பலம் 

சைவா போற்றி.
தலைவா போற்றி.

இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

நமது திருக்கோவில் உழவாரப் பணி மன்றத்தின் பிப்ரவரி மாத திருக்கோவில் உழவாரப் பணி 05.02.2012 ஞாயிறு காலை காட்டூர் கிராமம் (வழி:திருப்போரூர்) அருள்மிகு தையல்நாயகி உடனுறை  வைத்தியலிங்கேஸ்வரர்  திருக்கோயிலில் நிகழ திருவருள் கூட்டியுள்ளது.

இதனைக் கண்ணுறும் அன்பர்கள் சுற்றத்துடனும்,நண்பர்களுடன் 05-02-2012 அன்று காலை ஏழு மணிக்கே வந்திருந்து உழவாரப் பணியினை சிறப்பாக நடத்தி தருமாறு வேண்டுகிறோம். 

திருக்கோவிலின் தீப எண்ணெய்க்கு பெருமளவில் அடியார்களின் உதவி தேவைப்படுகிறது.

மதிய நேரத்தில் தொண்டர்களுக்கு அமுது செய்விக்கப்படும்.

காட்டூர் கிராமம் திருக்கோவிலுக்கு செல்லும் வழி:
திருப்போரூருக்கு ஒரு கிலோ மீட்டருக்கு முன்பாக கண்ணகப்பட்டு பஸ் ஸ்டாப்பில் இருந்து வலது புறம் நான்கு கி.மீ தொலைவில் காட்டூர் கிராமம் உள்ளது. தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரி, நெல்லிக்குப்பம் வழியாகவும் பஸ் மூலம் காட்டூர் கிராமத்துக்கு வரலாம். திருப்போரூரில் இருந்து காட்டூர் கிராமத்துக்கு நிறைய போக்குவரத்து வசதி உள்ளது. கண்ணகப்பட்டு பஸ் நிறுத்தத்தில் இருந்து காட்டூர் கிராமம் வர ஷேர் ஆட்டோ வசதி உண்டு.

பஸ் ரூட்: 
T60 - தாம்பரம் - காட்டூர் (வழி கூடுவாஞ்சேரி)
55N - தாம்பரம் - திருப்போரூர் (வழி கூடுவாஞ்சேரி)
555N - தாம்பரம் - திருப்போரூர் (வழி கூடுவாஞ்சேரி)
555M - தாம்பரம்-திருப்போரூர் (வழி மாம்பாக்கம்)
55V Cut - தாம்பரம்-காட்டூர் (வழி மாம்பாக்கம்)

இறங்குமிடம்: காட்டூர் வைத்தியலிங்கேஸ்வரர் சிவன் கோவில்.

அமைப்பாளர் சிவ. நா. ஆடலரசன் அவர்களை Cell No.9445121080 இல் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைப் பெறலாம்.
சிவத் தொண்டாற்றி சிவனருள் பெறுக.
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.