Saturday, October 17, 2009

யோகவாசிஷடம்-3 ஜால வித்தை

மனம் நினைத்தால் நெடும் தூரம் கூட பக்கமாகத் தோன்றும். ஓர் நிமிடம் ஒரு யுகமாய்த் தோன்றும். ஓர் யுகம் ஒரு நிமிடமாகவும் தோன்றும். உலகம் எப்படி மாயமானது, ஜாலவித்தை போன்றது என்பதை யோகவாசிஷ்டத்தில் வரும் ஒரு கதை மிக அழகாக விளக்குகிறது.


இந்தப் பரந்த உலகில் நல்ல வளமிக்க, 'உத்திர பாண்டவம்' என்ற நாடு உள்ளது. அந்த நாட்டை 'லவணன்' என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் ராஜா ஹரிச்சந்திரன் பரம்பரையைச் சேர்ந்தவர். சூரியன் போன்ற ஒளி மிக்கவர். எப்படி பூவின் வாசனை எங்கும் பரவுமோ அது போல அவரது புகழும் எங்கும் பரவி இருந்தது. சொல்லிலும் செயலிலும் நேர்மையானவர் என்று பெயர் பெற்றிருந்தார்.

ஒரு நாள், அவர் அரச சபையிலிருந்த போது சம்பரிகன் என்ற ஓர் மாயாஜாலக்காரன் உள்ளே நுழைந்து, மன்னனைப் பார்த்து, இந்த ஜால வித்தையைக் காணுங்கள் என்று கூறி, மன்னரின் முன் மயில் இறகுகளை ஆட்டினான். மன்னர் மிகப் பெரிய வெளிச்சத்தை கண்டார்.

அதே நேரத்தில் சிந்து நாட்டு மன்னர் அரச மண்டபத்துக்குள் நுழைவதைக் கண்டார். அந்த மன்னருடன் வேகமாக ஓடக் கூடிய ஒரு குதிரையும் வந்தது. வந்த மன்னர் லவணனைப் பார்த்து, 'இந்தக் குதிரை மிகவும் சிறந்தது. இந்திரனின் குதிரையான 'உச்சைசிரவஸ்' போன்றது. உங்களுக்கு இதை அன்பளிப்பாகக் கொடுக்கிறேன். இது உங்களிடமிருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்' என்று கூறினார். மாயஜாலக்காரன், 'மன்னரே, குதிரையின் மீது ஏறி சவாரி செய்யுங்கள்', என்று கூறினான்.

குதிரையைப் பார்த்த மன்னர் அப்படியே அசைவற்று சுவரில் வரைந்த சித்திரம் போல ஆகி விட்டார். அரசர் அந்த நிலையில் நீண்ட நேரம் தன்னை மறந்த நிலையில் இருந்தார். மந்திரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர். அரசரின் நிலை கண்டு ஒருவித  பயத்திலிருந்தனர். இரண்டு மணி நேரம் கழித்து மன்னர் தன் சுயநினைவுக்கு வந்தார்.

மந்திரிகளும், ஆலோசகர்களும் மன்னர் என்ன சொல்லப் போகிறார் என்று கேட்க ஆவலோடு இருந்தார்கள். மன்னரை வணங்கி, 'மனவலிமையுடைய நீங்கள் எப்படி மயங்கினீர்கள்? திடமனதுடையவர்கள் சாதாரணமாக ஏமாற்றம் அடைய மாட்டார்களே' என்று வினவினார்கள். 

மன்னர் கூறினார், 'மதிப்புக்குரிய மந்திரிகளே! நான் கண்ட காட்சியைப் பற்றிக் கேளுங்கள். ஜால வித்தைக்காரன் மயில் தோகையை வீசியதை அடுத்து நான் அந்தக் குதிரையின் மீதேறி சவாரி செய்தேன். குதிரை பல காதங்கள் ஓடி ஒரு காட்டை அடைந்தது. அந்தக் காடு தீயால் எரிக்கப்பட்டிருந்ததைப் போன்று காணப்பட்டது. பறவைகள், மரங்கள், நீர் போன்ற எதுவுமே காணப்படவில்லை. 

அந்தக் காட்டில் மனவருத்தத்துடன் சூரிய அஸ்தமனம் ஆகும் வரையில் சுற்றிக் கொண்டிருந்தேன். பிறகு ஒரு சிறிய காட்டை அடைந்தேன். அங்கு நரிகளும் பறவைகளும் காணப்பட்டன. பின்பு, குதிரையின் மீது சவாரி செய்து 'தம்பிரா' மரங்கள் அடர்ந்த காட்டை அடைந்தேன். அப்போது மரத்தில் தொங்கிய கொடியைப் பிடித்துக் கொண்டேன். உடனே குதிரை என்னை விட்டு ஓடி விட்டது'.  நான் களைப்படைந்து மரத்தின் அடியின் தூங்கினேன். அது ஒரு யுகம் போலிருந்தது. குளிரால் பற்கள் கிட்டித்து போயின. இருட்டான இரவு நீண்ட இரவானதாகவும் இருந்தது. 

பொழுது விடிந்ததும் அந்தக் காட்டின் வெகு தூரம் நடந்தேன். நண்பகலில் ஒரு கருமையான் நிறமுடைய மிகவும் அழுக்கடைந்த உடைகளை அணிந்த பெண் உணவுடன் செல்வதைக் கண்டேன். நான் அந்தப் பெண்ணிடம், 'எனக்கு உணவு கொடு. பசித்தவர்களுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் உணவு கொடுத்தவர்கள் பின்பு செல்வச் செழிப்பில் வாழ்வார்கள். எனக்கு பசி அதிகமாக உள்ளது' என்று வேண்டினேன்.  நான் பலமுறை வேண்டியும் அவள் எனக்கு உணவு தராமல் நடந்தாள். நான் அவளைப் பின் தொடர்ந்து வெகு தூரம் நடந்தேன். பிறகு அவள் கூறினாள்:'நான் கீழ்குடியினைச் சேர்ந்தவள். எனது பெயர் ஹரகேயூரி, அரசனே, என்னோடு நடந்து வந்ததால் மட்டுமே உனக்கு உணவு தர முடியாது' என்று கூறி மேலும் வெகு தூரம் நடந்தாள். நானும் தொடர்ந்து உணவு கிடைக்காதா என்ற ஆவலுடன் நடந்தேன்.

பின்பு அவள் என்னிடம் கூறினாள்: 'நீ எனக்கு கணவனாயிருந்தால் மட்டுமே நான் உனக்கு உணவு கொடுப்பேன். எனது தகப்பனாருக்கு இந்த உணவை எடுத்துச் செல்கிறேன். அவர் அருகாமையிலுள்ள நிலத்தை உழுது கொண்டிருக்கிறார். அவருக்கு உண்டான உணவை உனக்குத் தர எனக்கு உரிமையில்லை. ஆனால், நீ என் கணவனாக ஒப்புக் கொண்டால், ஒரு நல்ல கணவனை உணவளித்துக் காப்பாற்றவேண்டிய கடமை எனக்கு வந்து விடும். அப்போது உனக்கு நான் உணவளிப்பேன்.'

நான் உடனே 'பெண்ணே! நான் உனக்குக் கணவனாகச் சம்மதிக்கிறேன்' என்றேன். நான்  சொன்னதைக் கேட்ட அவளும் 'கணவனாக வரப் போகும் ஒருவனின் உயிர் ஆபத்திலிருக்கும் பொது, தகுதி, ஜாதி, பிறந்த வம்சம் இவற்றையெல்லாம் கவனிக்கக் கூடாது' என்று கூறி இருந்த உணவில் பாதியைக் கொடுத்தாள். நாவல் பழங்களைக் கொடுத்தாள்.' இவ்வாறாக நான் என்னிலும் கீழான குடியில் சென்று உணவுண்டேன். பசியாறி ஓய்வு எடுத்த பின்னர் அவள் என் கையைப் பற்றி தன தந்தையிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்தாள்: 'தந்தையே, இவர் தான் என் கணவர். நீங்கள் எங்களை ஆசீர்வதியுங்கள் என்று சொன்னாள்'

அவரும் அப்படியே ஆகட்டும் என்று சொன்னார். எப்படி எஜமானரிடம் இருந்து விடுபட்ட வேலையாட்கள் மன மகிழ்வுடன் செல்வார்களோ அது போல நாங்கள் இருவரும் அந்தக் காட்டுப் பகுதியில் உல்லாசமாய்த் திரிந்தோம். பின்பு மாலையில் மிருகங்களின் மாமிசங்களும் பறவைகளும் நிறைந்த அவர்களின் வீட்டுக்குச் சென்றோம்.

அந்தப் பெண்ணின் தந்தையாரும் என்னை அன்புடன் மருமகனே என்று கூப்பிட்டார். பின்னர் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். கருமையான நிறம் கொண்ட அவளுடன் சேர்ந்து நாயின் மாமிசத்தையும், மதுபானங்களையும் அருந்தினேன். திருவிழாப் போல எங்கள் மணநாளின் முதலிரவைக் கொண்டாடினோம். நானும் அவர்களில் ஒருவனாய் ஆனேன். இது போல ஏழு நாட்கள் கொண்டாட்டத்திலேயே கழிந்தன. இவ்வகையில் மேலும் எட்டு மாதங்கள் கழிந்தன.

அவளும் கருவுற்று ஓர் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மறுபடியும் மூன்று வருடத்தில் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மறுபடியும் மற்றொரு குழந்தையை பெற்றெடுத்தாள். இவ்வாறு அந்தக் காட்டுவாசிப் பெண்ணுடன் பல வருடங்கள் குளிரிலும், வெயிலிலும், வெப்பமான கோடை காலங்களிலும் வாழ்ந்தேன். எனக்கும் வயதாகியது. 

பின்பு ஓர் பஞ்சம் உண்டாகியது. மழையில்லாததால் செடிகளெல்லாம் கருகியது. இறப்பும், மரணமும் எங்கும் கோர தாண்டவம் ஆடியது. புற்களும், செடிகளும் காய்ந்து காட்டில் தீப்பற்றியது. துன்பமும் விதியும் சேர்ந்து வாழ்க்கை மிகவும் கொடியதாகியது. பலர் அப்பகுதியை விட்டு விந்திய மலைப் பகுதிக்குச் சென்றார்கள்.

'நானும் என் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் அந்த இடத்தை விட்டுக் கிளம்பி வேற்றிடம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம். பல காத தூரம் நடந்து ஒரு மரத்தடியில் ஓய்வெடுத்தோம். வேறு இரு காட்டு வாசி பெண்களுடன் என் மனைவி மரத்தடியில் உறங்கினாள். 'பிரிச்சகா' என்ற என் மகன், தனக்கும் மாமிசமும், இரத்தமும் வேண்டும் என்று  உயிரிழக்கும் நிலையில் வேண்டினான். என் வருத்தம் அதிகமாகி, அந்தத் துன்பத்திலிருந்து விடுபட நான் என்னுடைய உயிரை மாய்த்துக் கொள்ள விரும்பினேன். அப்படியாவது என் மகன், எனது வெந்த உடலை தின்று உயிர் வாழட்டுமே என்று காட்டுத்தீயில் புகுந்தேன். அப்போது என் உடலில் நடுக்கம் ஏற்பட்டது. கண் விழித்துப் பார்த்தால் இதோ இந்த சிம்மாசனத்தில் உங்களுடன் அமர்ந்திருக்கிறேன். சம்பரிகா என்ற ஜாலவித்தைக்காரனின் மாயாஜாலத்தால், நான் மாயமான சூழ்நிலையில் வாழ்ந்தேன். இது போன்றே ஜீவனின் அறியாமையினால் தான் மக்கள் அவதிப படுகிறார்கள்' இவ்வாறு கூறி முடித்தார் லவணன்.  எல்லாவற்றுக்கும் மூல காரணம் மனமே. (ஆதாரம்: யோகவாசிஷ்டம்)


இராம கீதை என்னும் யோகவாசிஷ்டம் - 2 (வசிஷ்டமுனிவரிடம் ஸ்ரீ ராமர் சொன்னது)

உலகம் மிகவும் மாறும் தன்மை உடையது. 

இப்போது பாலைவனமாகிக் காணப்படுவது,நாளைக்கு கடலின் அடிப்பாகமாகி மழைத்தண்ணீர் நிறைந்திருக்கும். 

இன்று வானளாவிக் காணப்படும் மலை, நாளை அழிந்து குழி போல் காணப்படும். 

அழகான உடையணிந்த இந்த உடலை இறப்புக்குப் பின் துணியின்றி குழியில் தள்ளுவார்கள். 

இன்று நரமாகக் காணப்படும் ஒரு ஊர், நாளை யாருமில்லாத காட்டுப் பகுதியாக மாறும். 

இன்றைய காடு நாளை நகரமாகும். 

இன்றைய தலைவன் நாளை வெறும் சாம்பலாகிறான். 

நிலம் நீராகிறது. நீர்நிலை நிலமாகிறது. 

குழந்தை, இளமை, மனித உடம்பு, சொத்துக்கள் போன்ற யாவையும் மாறும் தன்மை கொண்டவை. 

ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறும் தன்மை உடையவை. 

நாம் விடும் மூச்சால் நம்முடைய உடம்பு அழிகிறது. இந்த உலக மேடையில் ஆடப்படும் நடனம் போல் மனத்தில் பலவித கற்பனைகள் உண்டாகிறது. பெரிய மனிதர்களின் செயல்கள் நம் மனதில் ஞாபகத்தில் மட்டும் நிற்கின்றன. காரியங்கள் மறைந்து விடுகின்றன. 

பல விஷயங்கள், பொருள்கள், காலத்தால் சீரழிந்து விடும். பல புதிய பொருள்களை இந்த உலகம் உண்டாக்கும். மனிதர்களில் மிருகத்தன்மை உடையவர்களாக பலர் மாறுவர். 

கடவுள்கள் இருக்கலாம். இல்லாமலும் போகலாம். எதுவும் ஒரே மாதிரியாக இருக்காது. 

சூரியன் தன வெளிச்சத்தால் எல்லாவற்றையும் நமக்குக் காட்டுகிறார். பகல், இரவு அன்று மாறி மாறி காலத்தால் உண்டாகும் எல்லா மாறுதல்களையும் பார்வையிடுகிறார். 

பிரம்மா, சிவன், விஷ்ணு மற்றும் எல்லா பௌதிகப் பொருள்களும் ஒரு நாள் ஒன்றும் இல்லை என்று  ஆகிவிடும். 

ஸ்வர்க்கம், பூமி, காற்று, ஆகாயம், நதிகள், மலைகள், உலகிலுள்ள யாவையும் மரம் நெருப்பில் எரிவதைப் போல காலத்தால் எரிந்து விடும். 

உறவினர், செல்வம், வேலைக்காரர்கள் ஆகியவற்றால் மரண பயத்தில் உள்ளவர்களுக்கு பயனில்லை. ஒரு நேரத்தில் செல்வத்தில் மிதக்கிறோம். மறு நேரத்தில் வறுமையில் வாடுகிறோம். ஒரு நேரம் உடல் நலமாக இருக்கிறது. மறுநேரம் நோய்வாய்ப்பட்டு கஷ்டப் படுகிறோம். மரண பயம் தோன்றாத வரையில் மனத்தில் எல்லாம் இன்ப மயமாக இருக்கிறது. 

மற்றவர்களின் தீய செயல்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால், அந்தத் தீய செயல்களால் நாட்டில் உள்ள நல்லவர்களும் பாதிக்கப் படுவார்கள்.

இதனால் நாட்டில் கோழைத்தனம் அதிகரிக்கும். முட்டாள்களுடன் தொடர்பு கொள்ளுதல் எளிதாகும். ஆனால் அறிவாளிகளுடனும், ஞானிகளுடனும் தொடர்பு கொள்ளுதல் மிகக் கடுமையானதாகும். 

காலப் போக்கில் உலகிலுள்ள எல்லோரும் இறந்து போவார்கள். வாழ்க்கை  முழுவதும் மனைவி, குழந்தைகள், அவர்களுக்காக செல்வம் சேர்ப்பது என்று எண்ணி அதற்காகவே வாழ்ந்து, பின்பு அவைகள் காலத்தால் காணாமல் போக, மனிதர்கள் மனம் கலங்குகிறார்கள். துன்பமும் வேதனையும் படுகிறார்கள்.

ஸ்ரீ மகாவிஷ்ணுவின் இருபத்தி இரண்டு அவதாரங்கள்.

கடவுளின் அவதாரங்கள் என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது, மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களே. பாகவத புராணத்தின் படி, விஷ்ணுவின் அவதாரங்களாக இருபத்தி இரண்டு அவதாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
1. சனத் குமாரர்கள் (நால்வர்)
2. வராக அவதாரம்.
3. நாரதர்
4. நர நாராயணர்கள்
5. கபில ரிஷி
6. தத்தாத்ரேயர்
7. யக்ன நாராயணர்
8. ரிஷப தேவர்
9. ப்ரிது சக்கரவர்த்தி
10. மத்ஸ்ய அவதாரம்
11. கூர்ம அவதாரம்
12. தன்வந்தரி 
13. மோகினி
14. நரஸிம்ஹ அவதாரம்
15. வாமனர்
16. பரசுராமர்
17. ராமர்
18. வேத வியாசர் 
19. பலராமர்
20. கிருஷ்ணர்
21. புத்தர்
22. கல்கி 

மேற்குறிப்பிட்ட அவதாரங்களை பட்டியலிட்ட பின்னர் பாகவதம் சொல்கிறது,''இவற்றுடன் விஷ்ணு பகவானின் அவதாரங்கள் நிறைவு பெற்று விடவில்லை. எண்ணிலடங்கா அவதாரங்களை ஸ்ரீ விஷ்ணு தொடர்ந்து எடுத்துக் கொண்டே இருப்பார்.'' பகவத் கீதையிலும் ஸ்ரீ கிருஷ்ணர், ''எங்கெல்லாம் தர்மத்துக்கு ஆபத்து வருகிறதோ அங்கெல்லாம் நான் தோன்றுவேன்'' என்கிறார்.

நரகாசூர வதம் செய்து அதன் மூலம் ஆணவம் மற்றும் அறியாமை இருளை அகற்றி உலகத்தில் தர்மத்தை சம்ஸ்தாபனம் செய்த ஸ்ரீ கிருஷ்ண பகவானை தீபாவளித் திருநாளான இன்றும் என்றும் போற்றித் துதிப்போம்.
தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

Thursday, October 15, 2009

காலம் (இராம கீதை என்னும் யோகவாசிஷ்டம்)

எப்படி எலி நரம்பைக் கடித்து அறுத்து விடுமோ அது போல் காலம் நம் வாழ்க்கையை அழித்து விடும். மிகப் பெரிய மனிதர்களும் இதற்கு விதி விலக்கல்ல. உலகில் யாவற்றையும் விழுங்குவதால் காலம் மிகப் பெரிய சக்தியாகக் காணப்படுகின்றது. 

எப்படி, வடவாக்னி என்ற நெருப்பு,கடலிலுள்ள எல்லாவற்றையும் அழிக்கிறதோ, அப்படி காலத்தால் உலகிலுள்ள யாவையும் விழுங்கப்படும். குறிப்பிட்ட காலத்துக்குள் மேல் யாராலும் உயிர் வாழ இயலாது. ஆனால் எல்லாவற்றையும் விழுங்கிவிட்டு காலம் மறுபடியும் அப்படியே இருக்கும். வரம் பெற்ற அரசர்களும் இதற்கு விதி விலக்கல்ல. முக்குணங்களாலும் கட்டுப்பட்ட மிகப் பெரிய தேவர்களும் அதற்கு இரையாகிறார்கள். காலம் சுழன்று கொண்டே இருக்கிறது. மகா கல்ப காலத்தில் எல்லாவற்றையும் அழித்துவிட்டு, காலம் மீண்டும் எல்லாவற்றையும் உண்டு பண்ணுகிறது. 

காலையில் மரங்களை உண்டாக்கி, மதியத்தில் பூ, காய், கனிகளை உண்டுபண்ணி, இரவில் அவற்றை காலம் அழித்து விடுகிறது. ஒரு நிமிடத்தில் பேரழிவு, மறுநிமிடத்தில் ஒரு நல்ல காலம், ஓரிடத்தில் பிறப்பு, மற்றோரிடத்தில் மரணம் என்று ஒரே நேரத்தில் என்னென்ன நடக்கின்றன? 

குறைந்த அறிவுடையவர்கள் தேவையற்ற பேச்சு, எதையும் நம்பாமை, மதங்களிடையே சண்டை போன்றவற்றில் ஈடுபட்டு தானாக சவக் குழியில் வீழ்கிறார்கள்.

உலகில் மற்றுமின்றி இப்பிரபஞ்சத்தில் காணப்படும் யாவும் காலத்தால் விழுங்கப்படுகின்ற காரணத்தால், காலம் பிரபஞ்சத்தின் ஆன்மா என்று கூறப்படுகின்றது. 

காலம் ஒரு சுழல் நீர் போன்றது. மனிதர்களை ஆசையாலும், தீயபழக்கத்தினாலும் பாழும் குழியில் தள்ளி விடுகின்றது. காலமே எல்லாப் பேராசைகளுக்கும், வெறுப்புகளுக்கும், துன்பங்களுக்கும், நம்முடைய ஏற்றத்தாழ்வுகளுக்கும் காரணம். எப்படி சிறுவர்கள் பந்தை வைத்துக்கொண்டு விளையாடுகிறார்களோ, அது போல காலம், சூரியனையும், சந்திரனையும் வைத்துக் கொண்டு விளையாடுகிறது. 

கற்பகால முடிவில் இறந்தவர்களின் எலும்பை மாலையாகப் போட்டுக் கொண்டு காலம் நடனமாடும். கடைசியில் பிரளயாக்னியை உண்டு பண்ணி உலகை ஒன்றுமில்லா ஆகாயத்தில் கரையச் செய்யும். அப்பொழுது பிரமன், இந்திரன் என்று யாரும் இருக்க மாட்டார்கள். 

பல கல்பங்கள் தோன்றி அழியலாம். ஆனால் காலத்தை யாரும் தடுக்க இயலாது. காரணம் காலம் எழுவதுமில்லை; அழிவதுமில்லை. 

(ஆதாரம்: இராம கீதை என்னும் யோக வாசிஷ்டம் - முதல் காண்டம் - வைராக்கியப் பிரகரணம். இராமர் தனது 15-ம் வயதில் வசிஷ்ட முனிவரிடம் பல கேள்விகளை கேட்கிறார். அவைகளில் "காலம்" பற்றி இராமர் கேள்விகள் கேட்பதற்கு முன்னதாக தான் காலத்தினை பற்றி அறிந்து கொண்டதை விளக்குகிறார். அவற்றின் ஒரு பகுதியே மேலே நீங்கள் படித்தது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உண்டு. இராமரின் கூற்றான ''பல கல்பங்கள் தோன்றி அழியலாம். ஆனால் காலத்தை யாரும் தடுக்க இயலாது. காரணம் காலம் எழுவதுமில்லை; அழிவதுமில்லை'' என்ற கருத்து, அல்பர்ட் ஐன்ஸ்டீனின் "Relativity Theory of Time and Space" உடன் ஒத்துப் போவதைக் காணலாம்) . 

Sunday, October 11, 2009

Further information on Shyamantakamani

Glorious History of Koh-I-NoorBy N. P. Sen. Published by New Book Society of India, Post Box No. 250, New Delhi. Price: 15.
     This is a biography of the most brilliant and most precious heritage of India, viz., the Kohinoor, which has been rightly called, ‘the king of diamonds’ and ‘the diamond of kings’.
      The author traces the origin of the Kohinoor to the dawn of Indian history before the times of the Mahabharata. He seems to identify it with the legendary “Shyamanthaka Mani” to which references are made in the Vishnu Purana and the Bhagavata. The author then traces the history of this diamond, through the puraniclegends, and seems to suggest that this was given by Lord Krishna to the Sun-God, who gave it to Karna, the legendary hero of the Mahabharata, from whom it passed on to Arjuna, who presented it to his brother Yudhishtira. The author suggests that this diamond then adorned the crowns of various kings and successors of the Pandavas through Parikshit, the grandson of Arjuna. From this lineage, the diamond passed on to Raja Samvardhana, who is believed to be one of Ashoka’sgrandsons and then it was with the Hindu kings. Even during the invasion of India by MohdGhori, this diamond was preserved, and was smuggled to Malwa where the Parmar dynasty was in power. The last Hindu king who possessed it was Raja Ramdev.The author then proceeds to state that there is no information as to how this diamond passed on to the Sultans of Delhi. Nearly two centuries ago Nadir Shah from Persia invaded India, in search of power and plenty, and took possession of the diamond from the kings of Delhi. Later Shah Shuja, the king of Afghanistan managed to get it, but had to surrender it to Maharaja Ranjit Singh. Prince Daleep Singh, his successor was forced to hand over this to the British at the treaty of Lahore signed in 1849. This was presented to Queen Victoria in 1850 and since then, this great diamond of India is in the hands of the British Royalty.
       The purport in writing the book seems to be a very patriotic one viz., that the Kohinoor which is a great national asset of our country, should be returned back to us.
        In the absence of any other corroborating evidence, historical research workers may find it difficult, at the present stage of our knowledge, to accept as historically correct, the equation of this diamond with the legendary puranik “Shyamanthaka Mani” and its further course as described by the author in this book.
–DR. N. RAMESAN